01st March 2021 19:57:18 Hours
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் தெங்கு சார் உற்பத்திகளை மேற்கொண்டு ஏற்றுமதி செய்வதற்கான தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஷிஹான் அரசரட்ணம் அவர்களின் அழைப்பின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (28) யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவால் தெங்கு சார் உற்பத்தி சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பசுமைத் ஏற்றுமதி திட்டத்தை முன்னெடுக்கும் தனியார் நிறுவனம் தனது இரண்டாவது தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளதுடன் தேங்காய், தும்பு கயிறு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இயங்கு இந்த நிறுவனம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குதுடன் வேலையற்ற 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியிருப்பதுடன் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்ளவும் உதவுகிறது.
அதனையடுத்து இத்திட்டத்தின் முகாமைத்துவ பணிப்பாளரின் ஆரம்ப உரையில் பாதுகாப்புத் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது எனவும், யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் உதவியும் இத்திட்டத்துக்கு வழங்கப்பட்டமை ஊக்குவிப்பாகவும், திட்டத்தை அர்த்தமுள்ளதாக்குவும் வழியேற்படுத்தியது என குறிப்பிட்டார்.
இந்த திறப்பு விழாவில் 52 வது படைப்பிரிவின் தளபதி, சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், திரு ஷிஹான் அரசரட்னம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்துகொண்டனர். Running sport media | GOLF NIKE SHOES