26th February 2021 08:52:15 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவ நெல்சன் ஆகியோரால் வியாழக்கிழமை (25) தியதலாவையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ நலன்புரி வளாகத்தின் பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.
இராணுவத்தினருக்கான நலன்புரிதல் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் உள்ள இராணுவ நலன்புரி வளாகங்களை மேம்படுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், தியதலாவையிலுள்ள அதிகமான பாதுகாப்பு படைத் தளங்களை கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தளத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யும் போது இருவரும் இராணுவ பொறியாளர்கள் மற்றும் கட்டமைப்பாளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
ஆய்வு விஜயத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா மற்றும் சில மூத்த அதிகாரிகளின் கலந்துகொண்டனர். jordan release date | Women's Nike Air Max 270 trainers - Latest Releases