06th February 2021 04:52:40 Hours
இராணுவ வழங்கள் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் கோரிக்கைக்கு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து மகிழ்ச்சிகரமான பதில் கிடைத்துள்ளது. அதன்படி 10 எரிபொருள் விநியோக இயந்திரங்களை ( 5 இரட்டை மற்றும் 5 ஒற்றை குழாய் இயந்திரங்கள் ) அக்கூட்டுத்தாபனம் இராணுவத்துக்கு 5 ஆம் திகதி மாலை வழங்கிவைத்துள்ளது.
இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் பழைய எரிபொருள் விநியோக இயந்திரங்களை சீரமைப்பதற்கும் மற்றும் இராணுவத்தின் சிறந்த நடவடிக்கைகளை பாராட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மிக முக்கியமான கொள்வனவாளர் என்ற வகையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிக்காட்டலுக்கமைய, இராணுவ வழங்கள் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வனிகசேகரவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இவ்வாறான மகிழ்ச்சிகரமான பதில் கிடைத்துள்ளது. அதன்படி மிகவும் அவசியமான 10 பகுதிகளில் இந்த எரிபொருள் விநியோக பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.
அதற்கமைய சிபெட்கோ நிறுவனத்தின் (CEYPETCO) தலைவர் திரு சுமித் விஜேசிங்க, நிறைவேற்று முகாமைத்துவப் பணிப்பாளர் திரு புத்தின மாதிவெவ, பிரதிபொது முகாமையாளர்(சந்தைப்படுத்தல்) திரு கிரிஷாந்த விக்கிரமசிங்க, சிபெட்கோ நிறுவனத்தின் (CEYPETCO) சந்தைப்படுத்தல் முகாமையாளர் லக்ஷான் அபேகுணவர்தன, ஆகியோரால் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் வைத்து ஒரு புதிய எரிபொருள் விநியோக இயந்திரம் பாதுகாப்பு பதவி நலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிட் கையளிக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தாராள மனப்பான்மையுடனான செயற்பாட்டிற்கு இராணுவ தளபதி நன்றி தெரிவித்திருந்ததுடன், வழங்கிவைக்கப்பட்ட நன்கொடையையும் இராணுவம் சார்பாக ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவகு மற்றும் வழங்கள் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வனிகசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். trace affiliate link | Men’s shoes