25th November 2020 16:22:08 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையின் படைத் தளபதியும் புத்தல அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தின் தளபதியும் சிறந்த காலாட் படை வீரர்களில் ஒருவருமான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலான முன்மாதிரியான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதையிட்டு இன்று (25) பிற்பகல் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் பாராட்டப்பட்டார்.
அனைத்து நியமனங்களிலும் கடமைகள் மீதான அர்ப்பணிப்பு மற்றும் அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் பாடத்திட்டத்தில் அவர் சேர்த்த தரமான தொகுதிகள் குறித்து லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரியுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இராணுவ வாழ்விலிருந்து சிவில் வாழ்க்கைக்கு மாறிய பின்னர் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்தும் வினாவினார். இலேசாயுத காலாட் படையின் வீடமைப்பு திட்டங்கள், தயிர் தயாரிப்பு திட்டம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் படைத் தளபதியாக படையின் உட்கட்டமைப்பு பணிகள் அவரது சேவையினை தளபதி பாராட்டினார்.
லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆளணி முகாமைத்துவ பணிப்பகம் பணிப்பார் , இராணுவ ஊடக பேச்சாளர் மற்றும் இராணுவ ஊடக பணிப்பக பணிப்பாளர் மற்றும் இன்னும் சில முக்கியமான பதவிகளன் பாத்திரங்கள் பற்றிய நினைவுகளைப் புதுப்பித்தார், மேலும் அவர் ஒரு சிலரில் ஒருவராக இருப்பதையும் குறிப்பிட்டார் இங்கிலாந்தில் உள்ள மதிப்புமிக்க அரச கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வு கற்கையை கற்றுள்ளார். போர்க்களத்தின் அழியாத நினைவுகளையும், பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றிக்கான பாதையில் அவர்கள் இருவரும் பெற்ற அனுபவங்களையும் நினைவுபடுத்தவும் அவர் மறக்கவில்லை.
மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீராவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா சிறப்பு நினைவு பரிசு வழங்கியதோடு ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். பதிலுக்கு மேஜர் ஜெனரல் ஜயவீர இராணுவத் தலைவருக்கு நன்றி பாராட்டி அடையாள சின்னத்தை வழங்கினார், மேலும் தனது இராணுவக் கடமைகளை நிறைவேற்ற தளபதியின் சிறந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். latest jordans | Nike nike dunk high supreme polka dot background , Gov