23rd November 2020 06:47:13 Hours
காலம் சென்ற தலைமை பௌத்த தேரரின் புனித உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூன்று பௌத்த பீடங்களின் தேரர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, மத்திய மாகாண ஆளுநர், அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிவணக்கத்திற்குரிய மதகுரு, மிகவும் மதிப்பிற்குரிய பௌத்த துறவியும், பல துறவிகளையும் தர்மத்தைப் பின்பற்றுபவர்களையும் உருவாக்கியவர். இயற்கை எய்தும் போது அவரின் வயது 98 வருடங்கள் ஆகும். சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இறுதி ஊர்வலம் இடம்பெற்று, அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைப்பெற்றன. மறைந்த தலைமை பௌத்த துறவியின் புனித ஹரிக்கடுவ வித்யாசாகர பிரிவேனாவில் அரச அனுசரனையில் மூன்று நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இறுதி ஊர்வலம் தகனசாலைக்கு வருவதற்கு முன்னர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அவ்விடத்தில் பாதுகாப்பு செயலாளரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. Sport media | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News