06th November 2020 23:31:20 Hours
முன்னணி பால் தயாரிப்பு உற்பத்தியாளரான ஃபொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இன்று பிற்பகல் (6) நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள படையினருக்கு விநியோகிப்பதற்காக 10,000 பால் பக்கெட்களை நன்கொடையாக வழங்கியது.
நிறுவனத்தின் இலங்கை மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் நிர்வாக பணிப்பாளர் திருமதி வித்யா சிவராஜா , சில நிறுவன பிரதிநிதிகளான எங்கர் உற்பத்திகள் முகாமையாளர் திரு தினித் பதிரன, கூட்டு விவகாரங்கள் இணை பணிப்பாளர் திருமதி தமரி சேனநாயக்க, இலங்கை நுகர்வோர் விற்பனை உணவு சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் திரு ரோஷன் டி சில்வா ஆகியோர் இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்து தனிமைப்படுத்தல் மையங்களின் பராமரிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள படையினரின் பணிகளை பாராட்டியதோடு அவர்களின் பயன்பாட்டிற்காக பால் பக்கெட்டுகளையும் அன்பளிப்பு செய்தனர்.
இராணுவத் தளபதி நன்கொடை சிந்தனைக்கும் தாராள மனப்பான்மைக்கும் நன்றி தெரிவித்ததோடு குறித்த நன்கொடையினை படையினர்களிடையே விரைவாக விநியோகிப்பதையும் உறுதிப்படுத்தினார். Running sport media | jordan Release Dates