06th November 2020 16:03:08 Hours
இராணுவத்திற்கும் நாட்டிற்கும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்மாதிரியான சேவையின் பின்னர் கமாண்டோ படையின் மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன ஓய்வுபெற்றதற்கு முன்னதாக, பாதுகாப்பு பிரதானியும் தளபதியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (6) சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இராணுவத் தளபதி ஓய்வு பெறும் சிரேஸ்ட அதிகாரியுடன் எதிர்காலத் திட்டங்கள பழைய நினைவுகள் மற்றும் பிற முயற்சிகள் தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சந்திப்பின் இறுதியில் இராணுவத் தளபதி தனது பாராட்டுகளின் அடையாளமாக 53 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் பிரியந்த சேனரத்னவிற்கு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார். நினைவு பரிசில்க்கும் பாராட்டுகளுக்கும் இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தார். Buy Kicks | adidas Yeezy Boost 350