06th November 2020 17:03:08 Hours
இலங்கை கவசப் படையின் பெருமைமிகு வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன இலங்கை கவசப் படையின் தளபதியாக இராணுவத்தில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதற்கு முன்னதாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வெள்ளிக்கிழமை (6) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தப் போது அவரது மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இராணுவத்திற்கான அர்ப்பணிப்பு சேவை இராணுவத் தளபதி பாராட்டினார்.
இச்சந்திப்பின் போது லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்னவுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அவர் இராணுவத்திலும் இலங்கை கவசப் படையிலும் பல முக்கிய நியமனங்களில் பணியாற்றியமையையும் நினைவு கூர்ந்தார்.
ஓய்வு பெறும் சிரேஸ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் எதிர்பார்ப்புகளுக்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். சந்திப்பின் இறுதியில் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். Sportswear Design | UOMO, SCARPE