31st October 2020 22:55:26 Hours
ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் தான் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு, புதன்கிழமை 28 ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்திற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
இராணுவத் தலைமையக மைதானத்தில் அவருக்கு இலங்கை பீரங்கிப் படையினரால் இராணுவ சம்பிரதாய முரைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.தென் பின்னர் அவர் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஜெனரல் மேஜர் ஜெனரல் சேன வதுகே அவர்களினால் வரவேற்கப்பட்டார்.
லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பின்னர் தளபதியின் செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் விமானப்படைத் தலைவருக்கு அன்பான வரவேற்பு அளித்தார்
இருவருக்குமிடையலான சந்திப்பின் போது கொவிட்-19 பரவலை தடுப்பதில் ஈடுபட்டுள்ள முப்படையிரின் அர்பணிப்பு மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.கடந்த கால படை பிரிவுகளின் தளபதிகளாக அவர்களின் நினைவுகள் மற்றும் கூட்டுப் பொறுப்புகளையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர் மற்றும் இரு நிறுவனங்களுக்கிடையில் இருக்கும் ஒத்துழைப்பு குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
உரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப் படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு, நினைவுச் சின்னத்தினையும் வழங்கி வைத்தார்.மேலும் விமானப் படைத் தளபதியினாலும் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இறுதியில் விமானப்படைத் தளபதி தனது விஜயத்தின் அடையாளமாக அதிதிகள் புத்தகத்தில் தனது கையொப்பத்தினை இட்டார். short url link | Zapatillas de running Nike - Mujer