26th October 2020 19:39:18 Hours
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிதனியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் , அதிமேதகு ஜனாதிபதியவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் , இன்று (26) மாலை ஒரு சிறப்பு ஊடக அறிக்கையில் குறிப்பிடுகையில் இன்று முதல் எந்தவொரு கொவிட் தொற்றாளர்களுடன் முதல் தொடர்புகளைபேணிய நபர்கள் அந்தந்த வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார். .நாட்டில் தொற்றுநோய்களின் தற்போதைய நிலை, தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதித்தல், வெவ்வேறு பகுதி மட்டங்களில் கொவிட் தொற்றாளர்களை இனங்காணல் ஆகியவற்றை விவரித்த அவர், பொறுப்பற்ற நடத்தையின் ஆபத்துகள் குறித்து வலியுறுத்திய அதேவேளை சமூக இடை வெளிகளை கடைப்பிடித்து , முகமூடிகளை அணியுமாறு ராஜகிரிய நெப்கோவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். latest Running | UOMO, SCARPE