Header

Sri Lanka Army

Defender of the Nation

20th October 2020 21:54:37 Hours

இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கந்தக்காடு வைத்தியசாலை சுகாதார திணைக்களத்திற்கு வழங்கல் – நொப்கோ தலைவர் தெரிவிப்பு

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் பணிக்குழுவினரின் அவசர கூட்டம் இன்று பிற்பகல் (20) நடைபெற்றது. இதில் தற்போதைய நிலைமை, தற்போதைய முன்னேற்றங்கள் ஆகியவற்றை நெருக்கமாக ஆய்வு செயதைதோடு, முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமை, நெரிசலான நடமாட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைமைகள், பொது நிகழ்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் சிலரின் பொறுப்பற்ற நடத்தை வழிகள் ஆகியவற்றினால் வைரஸ் பரவுவதை காரணம் காட்டிய அவர்கள் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு தலைமைய பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதில் சுகாதார பணிப்பாளர் நாயகமும் மருத்துவ நிபுணருமான, டொக்டர் எஸ்.சிறிதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் , ஏனைய உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஒரு வரவேற்புக் உரையின் பின்னர் , மினுவாங்கொடை, சுதந்திர வர்த்த வலயம் ஆகிய இடங்களிலுள்ள உள்ள புதிய தொற்றாளர்கள் மற்றும் ஏனைய சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான தொடர்புகளை பேணிய நபர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள்செய்யப்பட்டதையும் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ,தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நோய் தொற்றுக்குள்ளானவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடியவர்களுக்கு விளக்கினார்.

"ஒரு திருமண நிகழ்வில் குறித்த பொது மக்கள் கூடியமையானது வைரஸ் பாதித்த நபர் கலந்து கொண்டதிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் அந்த தொடர்புகளின் நடத்தை அதிகரித்ததன் விளைவாக மற்ற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை பிரப்பிக்க காரணமாகின.மேலும், சில சுதந்திர வர்தக வலய தொழிலாளர்களின் அதே குடியிருப்புகளில் சில குடியுருப்புக்கள் நெரிசலானவை, அங்கு ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்களும் தொடர்புகளை பேணியுள்ளார்கள், இதுவும் தொற்று பரவலுக்கு காரணமாக காணப்பட்டது. அந்த வைரஸ் தொற்றாளர்கள் அவர்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்றபோது இந்த அம்சத்தில் குறைந்த கவனம் செலுத்தியுள்ளனர் என "லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டதோடு ஒரு தேசமாக சமூகப் பொறுப்பை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவுபடுத்தினார்.

நிலைமை மோசமாகிவிட்டால், அவசரகாலத்தில் பயன்படுத்தும் முகமாக சுகாதார அமைச்சக அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், இலங்கை இராணுவம் கிழக்கில் 400 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட கண்டகாடு வைத்தியசாலையை சுகாதாரத் துறையில் ஒப்படைக்க உள்ளன என்றும் அவர் கலந்து கொண்டவர்களிடம் கூறினார். அனைத்து பொது மக்களும் தங்கள் நகர்வுகள், பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்கள் வைத்திருந்த தொடர்புகள், சுய தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை விதித்தல் போன்றவற்றைப் பற்றிய உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் இதனால்நோய் கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். "இது ஒரு சமூக களங்கமாக கருதப்படக்கூடாது, ஆனால் இது உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கும் ஒரு வைரஸ் தொற்று. எங்களுக்கு முன் உங்கள் சுய இருப்பு உங்கள் சகோதர சகோதரிகள் அதிகமாக உள்ள எங்கள் சமுதாயத்தை பாதுகாக்கும், " என்று லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பணிக்குழுவில் ஒரு நிபுணர், தற்போதுள்ள தடுப்பு உத்திகளை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பரிமாற்றத்தின் வடிவங்களைக் கருத்தில் கொண்டு அந்த அணுகுமுறைகளை புதிய தோற்றத்துடனும் மதிப்பீட்டிலும் பின்பற்றுவதன் அவசியத்தையும் பரிந்துரைத்தார்,. அனைத்து பங்குதாரர்களையும் மேலும் மேம்படுத்துவதற்கான அவசியமும் விவாதங்களின் போது சுட்டிக் காட்டப்பட்டது.

புதிய வைரஸ் அலைகளை அடுத்து, நாட்டிற்கு பி.சி.ஆர் சோதனை கருவிகள் மற்றும் நோயாளிகளை வெளியேற்றும் மேலதிக விநியோகங்களை வழங்கிய உலக சுகாதார அமைப்பிற்கு டொக்டர் சிறிதரன் நன்றி தெரிவித்தார். affiliate tracking url | Nike for Men