15th October 2020 10:31:51 Hours
ரூபவாஹினி அலைவரிசையில் புதன்கிழமை (14) மாலை இடம் பெற்ற மாஜன தின எனும் சிங்கள நேர் காணல் நிகழ்வில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர அவர்கள் கலந்து கொண்டார். அவர்தெரிவிக்கையில் உயிர் ஆபத்துக்கள் இருந்த போதிலும் பொது மக்களை மீட்பதற்காக வரும் முப்படையினருர்க்கு முறையாக ஒத்துழைக்க வேண்டும் என்க் கேட்டுக் கொண்டார். படையினர்களால் கொவிட் தொற்றுக்குள்ளனவர்களின் நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடுகளை அடைந்த அவர்களை வெளியேற்றுவதற்காக அல்லது அருகிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்லும் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டார். உங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக செய்யப்படுகின்றமையால் இது ஒரு சமூக களங்கம் என்று கருதக் கூடாது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று இல்லை எல்லோரும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
முழு கணொளியையும் இங்கு காணலாம் affiliate tracking url | シューズ