10th October 2020 08:53:25 Hours
71 ஆவது இராணுவ ஆண்டு நிறைவு தினம் மற்றும் இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக (ஒக்டோபர் 10) பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கு விடுக்கப்பட்ட பரிந்துரையின் பேரில், 514 இராணுவ அதிகாரிகள் மற்றும் 14140 இராணுவ சிப்பாய்கள் தங்களது அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, 12 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 13 கேணல்கள் பிரிகேடியர் தரத்திற்கும், 47 லெப்டினன் கேணல்கள் கேணல் தரத்திற்கும், 58 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும், 234 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும் , 99 லெப்டினன்கள் கெப்டன் தரத்திற்கும் மற்றும் 51 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் தரத்திற்கும் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். (நிரந்தர மற்றும் தொண்டர் படை).
இதேபோல், லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் இராணுவ தினத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் மொத்தம் 14,140 இராணுவ சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளார். அதன்படி, 318 வொரன்ட் அதிகாரிகள்-2, வொரன்ட் அதிகாரி -1 தரத்திற்கும் , 985 பதவி நிலை சார்ஜென்ட்ஸ், வொரன் அதிகாரி -2 தரத்திற்கும், 1292 சார்ஜென்ட்கள், ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்திற்கும், 3058 கோப்ரல்கள், சார்ஜென்ட் தரத்திற்கும் , 3470 லான்ஸ் கோப்ரல்கள், கோப்ரல்கள் தரத்திற்கும் மற்றும் 4747 சாதாரன இராணுவச் சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல்கள் தரத்திற்கும் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். jordan Sneakers | Yeezy Boost 350 Trainers