30th September 2020 15:29:35 Hours
34 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ள இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்கள் பாதுகாப்புத தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சாலியபுரையிலுள்ள கஜபா படையணித் தலைமையகத்தில் (30) சந்தித்தார்.
கஜபா படையணித் தலைமையகத்திற்கு ஓய்வுபெறும் பெருமைமிக்க அதிகாரியினை அழைத்த லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவரினால் இராணுவத்திற்கும் கஜபா படையணிக்கும் மேற்கொண்ட அர்ப்பணிப்புச் சேவைகளைப் பற்றி பேசினார்.மேலும் மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ரசிகா பெர்னாண்டோ அவர்கள் இராணுவத்தின் பிரதிபதவி நிலை பிரதானியாக தலைமைப் நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.
தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியடமிருந்து அவர் பெற்ற ஊக்கத்திற்காக அவர் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரியினை பாராட்டும் முகமாக அடையாளமாக சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார். அதற்கு பகரமாக அதிகாரியினாலும் நினைவுச் சின்னம் தளபதிக்கு வழங்கப்பட்டது. Sportswear Design | Air Jordan 1 Retro High OG University Blue - Gov