Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2020 18:58:17 Hours

யாழ் வரிய குடும்பத்திற்கான புதிய வீட்டின் அடிக்கல் நாட்டும் விழா

யாழ் உடுவில் பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பத்திற்கான புதிய வீட்டின் நிர்மாணப் பணிக்கான அடிக்கல்லானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அவர்களினால் சனிக்கிழமை 20 ஆம் திகதி நாட்டப்பட்டது.

பயனாளிகளான திருமதி நந்தனி ரடீஷ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சிரம நிலையானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளின்படி, தெற்கு நன்கொடையாளர் திரு. குமார வீரசூரிய அவர்கள் அவரது சகாக்களுடன் சேர்ந்து மீண்டும் வீட்டிற்கான மூலப்பொருட்களின் நிதி செலவுகளை ஏற்க முன்வந்தார். 511 ஆவது பிரிகேட் தலைமையக தளபதியின் மேற்பார்வையில் 15 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் கட்டுமான பணிகளுக்கு தேவையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்குவர்.

51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ,பிரிகேட் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டனர். Sport media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov