30th November 2019 13:00:02 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் 121 ஆவது படைப் பிரிவினரால் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு உதவும் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்ட கா . பொ (சா/தர) கருத்தரங்கானது கடந்த (27) ஆம் திகதி புதன் கிழமை மொனராகலை எதில்மாலி மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.
இந்த திட்டமானது 121 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் சந்தன சேமவீர அவர்களின் முன் முயற்சியால் மொனராகலயில் உள்ள வலய கல்வி அலுவலகத்தினரால் அனுமதி வழங்கியதை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் உதவி கல்வி வலயத்தினரால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் 121 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் மாணவர்களுக்கு மதிய உணவும் காலை உணவும் இலவசமாக வழங்கப்பட்டன. jordan release date | GOLF NIKE SHOES