29th November 2019 21:45:07 Hours
கொழும்பு பாகிஸ்தானிய உயர்தாணிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேர்ணல் சஜாத் அலி இன்று மதியம் 28ஆம் திகதி இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் ளசந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் இராணுவத் தளபதியவர்கள் ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நோக்கில் இவ் விஜயத்தில் பாதுகாப்பு இணைப்பாளர் இவ் விஜயத்தை மேற்கொண்டார்.
இச் சந்திப்பில் இவ்விரு நாடுகளிற்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் இராணுவ கட்டமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது வருகை தந்த பிரதானியவர்களை கௌரவிக்கும் வகையில் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு இணைப்பாளர் புதிய இராணுவத் தளபதியின் நியமனத்திற்காக மற்றும் அவரின் எதிர்கால நடவடிக்கை சிறந்ததாக அமைய வேண்டுமென தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். spy offers | Footwear