20th November 2019 09:28:21 Hours
இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியின் பிரதானியான மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் இவரது சேவை காலம் நிறைவடைந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இராணுவ உயரதிகாரிக்கு இராணுவத்தில் இவர் ஆற்றிய பாரிய சேவைகளை கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்து இவருடன் உரையாடல்களையும் மேற்கொண்டு நினைவுச் சின்னமொன்றையும் பரிசாக வழங்கி வைத்து கௌரவித்தார்.
மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் இராணுவ பொறியியல் பிரதானியாகவும், கண்டியிலுள்ள 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளராகவும்,பொறியியல் படையணியின் படைத் தளபதியாகவும் கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Nike Air Max