04th September 2019 12:05:38 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக கேர்ணல் சமிந்த விஜயரத்ன அவர்கள் இம் மாதம் (2) ஆம் திகதி படைத் தலைமையகத்தில் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
படைத் தலைமையகத்தில் புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார். பின்னர் கட்டளைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு அனைவரது பங்களிப்புடன் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் 9 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியும், 20 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றிக் கொண்டனர். latest Running Sneakers | Men Nike Footwear