04th September 2019 12:04:38 Hours
கொஸ்கம சாலாவையில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் தமது கடமைப் பொறுப்பை மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக கடந்த 02ஆம் திதகி திங்கட் கிழமை ஏற்றார்.
இதன் போது இவ் அதிகாரியவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள்; இலங்கை இலெசாயுத காலாட் படையணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு வருகை தந்த அதிகாரியவர்கள் இப் படைத் தலைமையகத்தின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எல் எப் கஸ்தூரியாராச்சி அவர்களால் வரவேற்கப்பட்டார்.
சில நிமிடங்களின் பின்னர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தை இட்டு மஹா சங்கத்தினரின் ஆசிகளுடன் செத் பிரித் வழிபாடுகளை மேற்கொண்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து; புதிய தளபதியவர்கள் இப் படைத் தலையைமகத்தில் ரம்புட்டன் மரக் கன்றையும் நட்டார். அதனைத் தொடர்ந்து இத் தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்தின் படையினருக்கான உரையாற்றியதுடன் அனைவரும் தமது ஒன்றினைப்பை வழங்குமாறும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.Best jordan Sneakers | adidas Yeezy Boost 700 , Ietp