02nd August 2019 12:56:39 Hours
மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பொறியியல் படையணியின் 17 ஆவது படைத் தளபதியாக ஜூலை மாதம் (25) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை பொறியியல் படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் ரவீந்திர டயஸ் அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
பின்னர் புதிய படைத் தளபதி தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் சென்று நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி மலரஞ்சலி செலுத்தினார்.
புதிய படைத் தளபதி மஹா சங்க தேரரின் சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் தனது பணிமனையில் தனது பதவியை கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். பின்னர் தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
பின்னர் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் படைத் தளபதி கலந்து கொண்டு படையினர்களது சுகசெய்தி தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் தற்பொழுது வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike air jordan Sneakers | jordan Release Dates