31st July 2019 09:21:19 Hours
இராணுவ பதவி நிலை பிராதாணியும் கஜபா படையணியின் தளபதி மற்றும் கொமாண்டோ படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை 26 ஆம் திகதி தேவையுள்ள ஒரு குடும்பத்தினருக்கான வீடு அன்பளிப்பின் பின்னர், சிரச வானொலியின் 25 ஆவது ஆண்டு நிறைவு தினம் மற்றும் 21 ஆவது சிரச ஊடக தினங்களை முன்னிட்டு எம்.பி.சி. வலையமைப்பு தனியார் நிறுவனத்தினால் அநுராதபுர சாலியபுரவில் உள்ள கஜபா படையணியின் வளாகத்தில ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய மர நடுகை விழாவில்; கலந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கஜபா படையணியின் பிரதி மத்திய கட்டளை தளபதி கேணல் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால வரவேற்கப்பட்டார். அதனைத் தொடந்து மேஜர் ஜெனரல் அவர்களனால் ‘கரண்ட’ மரக்கன்று ஒன்று நடப்பட்டு ‘துரு சிரச’ நிகழ்ச்சியானது அரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் கெபிட்டல் மஹாராஜா கம்பனியின் மின்னணு ஊடக பணிப்பாளர் திருமதி நதீர வீரசிங்க மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மேஜர் ஜெனரல் அவர்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்டனர்.
மேலும் கஜபா படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஒரே நேரத்தில் வித்தியாசமான இனங்களைக் கொண்ட 1000 மரக்கன்றுகளை நட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது. Best jordan Sneakers | Jordan Release Dates , Iicf