17th June 2019 17:36:38 Hours
பொசொன் போயா தினத்தை முன்னிட்டு சாலியபுரவில் உள்ள கஜபா படைத் தலைமையகத்தால் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை (16) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கஜபா படைத் தலைமையக தளபதியும் இராணுவ பதவிநிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இப் படைத் தலைமையகத்தின் சென்டர் கெமடான்ட் பிரிகேடியர் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் அவர்களின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது பொசொன் வெளிச்ச அலங்கார கம்பங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் (பதி கீ) போன்றன இடம் பெற்றன.
இதன் போது பாரம்பரிய ரீதியாக பொசொன் தின நிகழ்விற்கான விளக்கேற்றப்பட்டது. இதன் போது கஜபா படையணித் தளபதியுடன் இணைந்து அவரது பாரியாரும் கஜபா படையணி சேவா வணிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் மற்றும் பல உயரதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கஜபா படையினர் மற்றும் அனுராதபுரவில் உள்ள சுமங்கள தஹம் பாடசாலை மாணவர்கள் போன்றோரின் ஒன்றினைப்பில் பொசொன் பக்திப்பாடல்கள் இடம் பெற்றது.
மேலும் இந்; நிகழ்விற்கான ஒழுங்குகளை பிரதி மத்திய தளபதியான கேர்ணல் எல் எச் எம் ராஜபக்ச கேர்ணல் ஆர் எம் எச் ஜயதிஸ்ஸ போன்றோர் மற்றும் கட்டளை அதிகாரிகள் போன்றோர் மேற்கொண்டிருந்தனர்.Running sport media | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf