07th June 2019 18:46:35 Hours
இராணுவத் தளபதியவர்களின் துருலிய வெனுவென் அபி எனும் திட்டத்திற்கு அமைவாக சர்வதேச கிரிக்கெட் சங்கம் மற்றும் ஹோமாகம நிவாசி அபிவிருத்தி சங்கம் போன்ற 600 பெறுமதிமிக்க மரக் கன்றுகளை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் அனைத்து செயற்பாட்டு கட்டளை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களுக்கு கடந்த திங்கட் கிழமை (03) வழங்கப்பட்டது.
அந்த வகையில் 299கரந்த மரக் கன்றுகள் 30 எஹெல மரக் கன்றுகள் 140 மீ மரக் கன்றுகள் 80கும்புக் மரக் கன்றுகள் மற்றும் 50கொபொன்நீல மரக் கன்றுகள் போன்றன வழங்கபட்டன. இவ்வாறான மரக் கன்றுகளை இராணுவத்தினர் மிக விரைவில் நடவுள்ளனர்.
இதன் போது மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் நன்கொடையாளர்களுக்கு இராணுவத்தின் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். best Running shoes brand | Air Max