19th December 2018 11:45:51 Hours
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு நத்தார் தின நிகழ்வுகள் கடந்த திங்கட் கிழமை(17) யாழ் சென் மேரிஸ் ஆலயத்தில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதன் போது நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கொண்டாடப்பட்டது. மேலும் யாழ் பாதிரியாரான வைத்தரியர் ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது ஹோலி பெமில் காண்வண்டின் சிறார்களால் கிறிஸ்தவ கீதங்கள் போன்றன இராணுவ பேண்ட் வாத்திய குழுவினரின் பங்களிப்போடு இடம் பெற்றது. இதன் போது சுன்னாகம் அந்தோனியார் ஆலய மற்றும் யாழ் மத்திய வரைகலை மாணவர்கள் மற்றும் யாழ் பாதுகாப்பு படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்றோரின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மதத் தலைவர்கள் யாழ் நீதவான் முப்படை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.Adidas footwear | Nike