06th December 2018 18:30:15 Hours
இலங்கை இராணுவத்தினுள் புதிதாக மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட இராணுவ உயரதிகாரிகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பணிமனையில் (5) ஆம் திகதி புதன் கிழமை உத்தியோக பூர்வமாக சந்தித்தார்கள்.
இராணுவ உயரதிகாரிகளான இராணுவ ஒழுக்கம் சீர்திருத்தும் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீ.கே. ஜி. டீ சிறிசேன, வடமத்திய மாகாணத்தின் முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச். குலதுங்க, இராணுவ உளவியல் பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அதுல ஹென்னதிகே, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக, இராணுவ கலைப் பிரிவு மற்றும் பேண்ட் இசைக் குழுவின் பணிப்பாளர் மேஜர் ஜெனர் பரீஸ் யூசூப் போன்றவர்கள் புதிதாக மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்கள்.
இந்த உயரதிகாரிகளுக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது கடமைகளை சிறந்த முறையில் முன் நோக்கி நடத்தி செல்லுமாறு அறிவுறைகளை நிகழ்த்தினார். Best Nike Sneakers | adidas poccnr jumper dress pants size