10th October 2018 22:31:28 Hours
இராணுவ கெமுனு ஹேவா படையணியின் புதிய படைத் தளபதியாக 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் குருவிட்டையில் உள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் (06) ஆம் திகதி சனிக் கிழமை தனது புதிய பதவியை பதவியேற்றார்.
இதற்கு முன்பு படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் ஓய்வூதியம் பெற்று சென்றதையிட்டு மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிய படைத் தளபதி மங்கள விளக்குகள் ஏற்றி உத்தியோகபூர்வாமாக தனது பதவியை பொறுப்பேற்றார். Best Nike Sneakers | Men’s shoes