06th July 2018 19:56:21 Hours
அநுராதபுரம் சாலியபுரத்தில் அமைந்துள் கஜபா படையணி தலைமையக வளாகத்தினுள் நீச்சல் தடாகம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மேலும் கஜபா படைவீரர்கள் நலன்புரி நிமித்தம் சேனபுர இராணுவ முகாமிலும் ஹைட்ரோ தெரபிக் நீர்த்தேக்க குழுவின் கட்டுமான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா , கஜபா படையணியன் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் மற்றும் செம்பர் லங்கன் என்டர்பிரேனர்ஷ் நிறுவனத்தின் தலைவி திருமதி செஹானி பியசேன அவர்களும் இந்த ஆரம்ப அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா , கஜபா படையணியன் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் மற்றும் செம்பர் லங்கன் என்டர்பிரேனர்ஷ் நிறுவனத்தின் தலைவி திருமதி செஹானி பியசேன அவர்களின் பங்களிப்புடன் சேனபுர இராணுவ முகாமில் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றன.
இந்த கூட்ட கலந்துரையாடலின் போது சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான இராணுவ வீரர்களும் சேவையாற்றி வருகின்றனர் என்றும் ஊர்ஜிதமாயுள்ளது.
buy footwear | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD