17th June 2018 19:03:28 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651. 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசங்களில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ 651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 15 (தொ) சிங்கப் படையணியினால் பிள்ளையார் கோயிலில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 652 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 7 (தொ) இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினால் அக்கரயான்குளம் பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
bridge media | Nike Off-White