19th May 2018 15:15:16 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு மருந்து போதை கட்டுப்படுத்தும் செயலமர்வு.
தேசிய ஆபத்து மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (15) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் தேசிய ஆபத்து மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் உத்தியோகத்தர்களான சாமர பிரதீப் கருணாரத்ன, இரேஷா இந்தீவரி அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களினால் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த செயலமர்வில் 18 இராணுவ அதிகாரிகளும், 310 படை வீரர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செயலமர்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்.
url clone | Women's Designer Sneakers - Luxury Shopping