14th October 2017 23:15:54 Hours
இராணுவ தளபதி தனது பதவியேற்பின் பின்பு முதலாவது விஜயத்தை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (14) ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொண்டார்.
வன்னித் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வரவேற்று இராணுவ தளபதிக்கு வன்னி பாதுகாப்பு படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இராணுவ தளபதியினால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவத்தினர் 1000 பேருக்கு தனது உரையை ஆற்றினார்.
அந்த உரையின் போது அவர் தனது எதிர்கால குறிக்கோள்கள் தொடர்பாகம் தொடர்ச்சியான பயிற்சியின் வேகத்தை தக்க வைத்துக் கொள்ளுதல், சமாதான காலத்தில் வேறு எந்த இராணுவத்திலும் இருப்பதையும் 1/3 படை வீரர்கள் எந் நேரமும் நடவடிக்கை கடமைகளில் தயார் நிலையிலும் மற்றைய படை வீரர் 1/3 கட்டிட நிர்மானிப்பு பணிகளிலும் மற்றும் 1/3 படை வீரர்கள் நிர்வாக பணிகளிலும் இருக்க வேண்டும் என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.
மேலும் இவரது வருகையின் நினைவையிட்டு படைத் தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு மற்றும் அனைத்து படையினருடன் கலந்து தேநீர் விருந்து உபசாரத்திலும் கலந்து கொண்டார். அத்துடன் இவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
இறுதியில் இந்த தளபதிகளுக்கு இடையில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று அதனை தொடர்ந்து வன்னித் தளபதியினால் இராணுவ தளபதிக்கு நினைவு பரிசும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
bridgemedia | nike fashion