Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd May 2024 18:21:05 Hours

இராணுவ புலனாய்வுப் படையணியில் புத்தாண்டு கொண்டாட்டம்

இராணுவ புலனாய்வுப் படையணியில் 26 ஏப்ரல் 2024 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் இராணுவ புலனாய்வுப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் மங்கல விளக்கேற்றியதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.

பனிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, ரபான் இசைத்தல், யானைக்கு கண் வைப்பது, கயிறு இழுத்தல், விநோத உடை மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் மிகவும் மகிழ்வித்தனர்.

நிகழ்வின் முடிவில் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கிண்ணங்களை வழங்கினர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அவர்களது துணைவியர் மற்றும் பிள்ளைகள் புத்தாண்டு கலாசார நிகழ்வுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.