24th April 2024 18:06:19 Hours
மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 25 வது படைத் தளபதியாக 2024 ஏப்ரல் 04 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள படையணியின் படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், படையணியின் பணிநிலை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர், படையணித் தலைமையகத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இலங்கை இராணுவ மகளிர் படையணி நினைவுத்தூபியில் வீரமரணமடைந்த போர் வீராங்கனைகளின் நினைவாக படையணியின் புதிய படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், புதிய பதவியை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் சிரேஷ்ட அதிகாரி படையணி பணியாளர்களுடன் சில குழுப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
மேலும், மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் தனது பணி மற்றும் கடமைகள் குறித்து படையினருக்கு உரையாற்றினார். படையணியின் மதிப்பை பாதுகாக்க குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அன்றைய நிகழ்வின் முடிவில், படையணியின் படைத் தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், பங்கேற்பாளர்களுடன் தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.