22nd April 2024 12:30:15 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தேநீர் மேசை 16 ஏப்ரல் 2024 அன்று இராணுவ உடற்பயிற்சி கூட வளாகத்தில் நடைபெற்றது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அன்றைய பிரதம அதிதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் பாரம்பரிய மங்கல விளக்கேற்றியதன் பின்னர் அடையாள புத்தாண்டு உபசரிப்பு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியின் வாழ்த்து புத்தாண்டுச் செய்தி வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்கள் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரியும் 36 சிவில் ஊழியர்களுக்கு பரிசப்பொதிகளை வழங்கினார்.
பாரம்பரிய தேநீர் மேசையில் பல வகையான பாரம்பரிய இனிப்புபண்டங்கள் மற்றும் பாற்சோறு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தளபதி பங்கேற்பாளர்களுடன் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.