19th April 2024 19:54:14 Hours
11 வது காலாட் படைப்பிரிவு அதன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 18 ஏப்ரல் 2024 அன்று 1 வது இலங்கை ரைபல் படையணியில் பாரம்பரிய புத்தாண்டு விழாவை கொண்டாடியது.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் யானைக்கு கண் வைத்தல், சமநிலை ஓட்டம், பணிஸ் சாப்பிடுதல், தடை தாண்டும் ஓட்டம், ஓலை நெய்தல், தலையணை சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல் மற்றும் பல பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகள் இடம்பெற்றன.
விழாவின் முடிவில், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பரிசில்கள் மற்றும் கிண்ணங்களை வழங்கினர்.