17th April 2024 16:55:35 Hours
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தினரால் 10 ஏப்ரல் 2024 அன்று சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது.
இந்த திட்டமானது இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. 2024 ம் ஆண்டின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு சிவில் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம் இந்த நன்கொடையை வழங்கியது.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.