12th April 2024 16:40:16 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் 09 ஏப்ரல் 2024 அன்று கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிங்கள தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.
கொண்டாட்டத்தில் மரதன் ஓட்டம், சறுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல், வினோத உடை போட்டி போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகள் இருந்ததுடன் ஒரு கிராமப்புற வீடு வளாகத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் 34 சிவில் ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை கிழக்கு தளபதி வழங்கினார். ஒரு பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு அடைந்தது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.