Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2024 13:00:26 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் நீர் வழங்கல் திட்டம்

11 வது (தொ) கஜபா படையணியின் சமூக சேவையின் ஒரு திட்டமாக அண்மையில் ஏற்படுத்திய புனித பாத்திமா ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய வசதியை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திறந்து வைத்தார்.

7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் ஆனந்தபுரத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் பணியினை மேற்கொண்டனர். ஒரு தாய் மற்றும் அவரது சிறு பிள்ளை கொண்ட குடும்பம், அவரது கணவர் இல்லாததால் சவால்களை எதிர்கொண்டது. 02 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்ற விழாவின் போது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பயனாளிகளுக்கு வீட்டை வழங்கினார். அமெரிக்காவில் வசிக்கும் நன்கொடையாளர்கள் வீட்டின் கட்டுமானத்திற்கு நிதியுதவி செய்தனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,, சிப்பாய்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.முளரிதரன், புனித பாத்திமா றோமன் கத்தோலிக்க பாடசாலையின் அதிபர் அருட்.சகோதரி நிர்மலா வசந்தன், மாணவர்கள், பிரதேச மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.