04th April 2024 11:47:47 Hours
கெமுனு ஹேவா படையணியில் பல்வேறு நிலைகளில் இருந்து ஓய்வுபெற்ற கெமுனு ஹேவா பணியாளர்களின் நிர்வாக பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் தொடர்பான நிகழ்வு 5 வது கெமுனு ஹேவா படையணியில் 24 மார்ச் 2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். ஆளனி நிர்வாக பணிப்பகம், நலன்புரி பணிப்பகம், இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகம், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பிரதிநிதிகளின் பங்குப்பற்றலில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் தொடர்பான பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி.வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.