Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd April 2024 15:08:37 Hours

ஐ.நா பிரதிநிதி வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளரை சந்திப்பு

ஐ.நா.வின் பிரதிநிதியான திரு. அசார் சைகலி அவர்கள் 01 ஏப்ரல் 2024 அன்று வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எல்.எஸ்.டபிள்யூ லியனகே யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களை சந்தித்தார்.

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பானது 2024 ஏப்ரல் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் 15 வது இலங்கை பாதுகாப்பு படை குழுவின் லெபனான் பயணம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.  

இந்த சந்திப்பின் போது இரு தரப்பினரும் படையினரின் சுழற்சி செயல்முறையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். லெபனானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் இலங்கை பாதுகாப்பு படையினரின் பெறுமதியான பங்களிப்பை எடுத்துக்காட்டி, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கைப் படைகளை அனுப்புவதில் ஐ.நாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு பணிப்பாளர் நன்றி தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலின் போது பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.