28th March 2024 16:30:35 Hours
யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் கே.பஹீரதன் மற்றும் கலாநிதி ஜே.அரசகேசரி ஆகியோர் 26 மார்ச் 2024 அன்று யாழ். இராணுவப் பண்ணையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் ஒரு குழுவை வழிநடத்தினர்.
வளாகத்தை வந்தடைந்த குழு, யாழ். பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் அவர்களினால் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வருகை தந்த குழுவினர் பல்வேறு பயிர்களை ஆய்வு செய்வதற்காக களப் விஜயத்தை மேற்கொண்டனர். அவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, பிரச்சனைக்குரிய பகுதிகளைக் கண்டறிந்து, பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், சிறந்த அறுவடையை உறுதி செய்வதற்கும் யோசனைகள் மற்றும் அறிவை வழங்கினர்.
பின்னர், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவப் பண்ணையில் மட்டுமன்றி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள பசுமை இல்லத்திலும் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவும் யாழ் தளபதி வலியுறுத்தினார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.