27th March 2024 19:01:10 Hours
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் திரு ஶ்ரீ சாய் முரளி எஸ் அவர்கள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை 2024 மார்ச் 26 ஆம் திகதி யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக தூதுவரை யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். கலந்துரையாடலின் போது, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
உரையாடலின் முடிவில், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி I - உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.