27th March 2024 18:44:32 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் 21 மார்ச் 2024 அன்று முதலாவது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
1 மற்றும் 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் கட்டளை அதிகாரிகள், படையினர்களுடன் இணைந்து இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியை இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி வளாகத்திற்கு அன்புடன் வரவேற்றனர்.
பின்னர் இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி கேட்போர் கூடத்தின் 1 வது மற்றும் 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணிகளின் படையினர்களுக்கு உரையாற்றியதுடன், படையணிகளை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளிப்படுத்தினார். மேலும், இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி, படையினர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளின் வெற்றிகரமான ஒருங்கிணைப்புகளைப் பாராட்டியதுடன் படையலகுகளின் முன்னேற்றத்தை நோக்கி ஒரு கூட்டுக் குழுவாகப் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிரதி தளபதி, இராணுவத் தொண்டர் படையணியின் படையினருக்கு படையலகுகளை உயர் தரத்தில் வைப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்திற்காக நன்றி தெரிவித்தார்.
விஜயத்தின் நிறைவில் இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்து, விருந்தினர் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
1 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் கட்டளை அதிகாரி, 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இலங்கை ரைபிள் படையணியின் ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்தில் இணைந்துகொண்டனர்.