Header

Sri Lanka Army

Defender of the Nation

26th March 2024 19:35:14 Hours

4 வது கெமுனு ஹேவா படையணியினால் 2024 ஆம் ஆண்டு உலக நீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

2024 உலக நீர் தினத்தை முன்னிட்டு 4 வது கெமுனு ஹேவா படையணி உன்னிச்சை நீர்த்தேக்க பகுதிகளை மையமாகக் கொண்டு சிரமதான பணியை 22 மார்ச் 2024 அன்று முன்னெடுத்தது.

23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். 232 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், வவுணத்தீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதம பொறியியலாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டம் முன்னெடுக்கபட்டது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 25 அதிகாரிகளுடன் 25 இராணுவத்தினரும் உன்னிச்சை கிராமத்தைச் சேர்ந்த 6 பொதுமக்களும் சிரமதானப் பணியில் கலந்து