25th March 2024 15:00:56 Hours
64 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ். தேவப்பிரிய யூஎஸ்பீ அவர்கள் 5 வது (தொ) இலங்கை சிங்க படையணிக்கு 19 மார்ச் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு படையினர் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கியதுடன், 5 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மரியாதையுடன் வரவேற்றார். படையினருக்கான உரையின் போது படைப்பிரிவு தளபதி நாட்டில் நிலவும் குற்றச்செயல்களுக்கு இராணுவ வீரர்கள் சம்பந்தப்படும் முக்கியமான பிரச்சினை குறித்து தெளிவுப்படுத்தினார். அத்தகைய செயல்களின் விளைவுகளை அவர் எடுத்துரைத்ததுடன் இந்த சவால்களை எதிர்ப்பதற்கான உத்திகளையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் 642 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.