21st March 2024 13:14:19 Hours
இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, 121 வது காலாட் பிரிகேட் படையினர் பார்வை மற்றும் செவிபுலனற்ற மாணவர்களின் பாடசாலையான வெல்லஸ்ஸ சுபாக்யா கல்லூரியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்திட்டத்தை மேற்கொண்டனர்.
12 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 121 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில், இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் ஏழு வீரர்களும், 18 வது கெமுனு ஹேவா படையணியின் 09 வீரர்கள் பாடசாலையின் பிரதான வீதியை கொங்ரீட் இடுவதிலும் கழிப்பரையை புனரமைப்பதிலும் ஈடுபட்டனர்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மேஜர் அனுர விஜேவிக்ரம (ஓய்வு) அவர்களின் நிதியுதவியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2024 மார்ச் 15 ஆம் திகதி கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகள் பாடசாலை மாணவர்களின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்டது.