19th March 2024 17:38:25 Hours
மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் தகுதியான 54 மாணவர்களுக்கு அத்தியாவசியப் பாடசாலை உபகரணங்களை 15 மார்ச் 2024 அன்று வழங்கப்பட்டது.
றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களின் நட்புறவு சங்கத்தின் திரு. பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் நட்புறவு சங்கம் இந்த நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கினர்.
இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நற்பணி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.