19th March 2024 17:35:12 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர் நிகழ்வுகளுடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது 11வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
2024 மார்ச் 12 மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் பண்டாரவளை, அமுனுதொவ முதியோர் இல்லத்தின் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தியதுடன், அங்கு வசிப்பவர்களுக்கு மறுநாள் (13 மார்ச் 2024) சுவையான மதிய உணவை வழங்கியதுடன் இசையுடன் அவர்களை மகிழ்வித்தனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் கலந்து கொண்ட சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றும் மாலையில் இடம்பெற்றது. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் பங்கேற்புடன் மாலையில் நடைபெற்ற தர்ம பிரசங்கத்துடன் அன்றைய நிகழ்வு நிறைவுற்றது.
2024 மார்ச் 14 ம் திகதி 25 பௌத்த தேரர்களை, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு அழைத்து அவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்வு நாளில் இரவு உணவு மற்றும் கொல்ப் மைதானத்தில் இடம் பெற்ற இசை நிகழ்வுடன் நிகழ்வு நிறைவுற்றது.