17th March 2024 15:41:19 Hours
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அவசரகால சூழ்நிலைகளுக்கு தயாராகும் வகையில் தீயணைப்பு பயிற்சியை 15 மார்ச் 2024 அன்று கொட்டகலை இலங்கை பெற்றோலிய கலஞ்சிய நிலையத்தில் மேற்கொண்டனர்.
பயிற்சியில் தீ ஏற்படுவதற்கான காரணங்கள், கட்டுப்பாட்டு பொறிமுறைகள் மற்றும் அணைப்பு வகைகள் பற்றிய விரிவுரைகள், அதைத் தொடர்ந்து ஒரு செயல்விளக்கம் மற்றும் நடைமுறை பயிற்சி அமர்வு ஆகியவை அடங்கியிருந்தன.
கொட்டகலை இலங்கை பெற்றோலிய கலஞ்சிய நிலையத்தின் அத்தியட்சகர் அவர்களின் அழைப்பின் பேரில் 112 வது காலாட் பிரிகேடின் மேற்பார்வையின் கீழ் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஒரு அதிகாரி மற்றும் 20 சிப்பாய்கள் இப் பாடநெறியில் கலந்து கொண்டனர்.