16th March 2024 15:35:53 Hours
533 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜி.ஏ.கே.ஆர் குணரத்ன பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 533 வது காலாட் பிரிகேட் அதன் 27 வது ஆண்டு நிறைவு விழாவை 2024 மார்ச் 11 முதல் 13 வரை தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு நாளுக்கு முன் 2024 மார்ச் 11 ஆம் திகதி படையினர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடாத்தினர். மறுநாள் காலை, பலுகஸ்வெவ புண்யவரதாராம விகாரையின் மகா சங்க உறுப்பினர்களுக்கு படையினர் அன்னதானம் வழங்கியதுடன், முகாம் வளாகத்தில் நடைபெற்ற போதிபூஜையிலும் படையினர் பங்கேற்றனர்.
ஆண்டு நிறைவு நாளில் படையினர் 533 வது காலாட் பிரிகேட் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கியதுடன், அவருடன் குழுப்படமும் எடுத்துக் கொண்டனர். பின்னர், தளபதி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்ததுடன், அனைத்து நிலையினருடனான தேநீர் மற்றும் மதிய உணவின் போது இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.